2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது-பிரதமர் மன்மோகன் சிங்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இதையொட்டி லோக்சபா சபாநாயகர் மீரா குமார் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் பிரதமரை சந்தித்தனர். அப்போது பிரதமர் கூறுகையில், 2ஜி விவகாரம் கோர்ட் விசாரணையில் உள்ளது. எனவே அதுகுறித்து நாடாளுமன்றத்தில் எந்த முடிவும், தீர்ப்பும் எழுதப்படக் கூடாது. அதைத் தவிர்க்க வேண்டும். கோர்ட்தான் இதில் தீர்ப்பெழுத வேண்டும்.
லோக்பால் வரைவு மசோதா தயாராகி விட்டது. அதன் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டியது நாடாளுமன்றம்தான். ஜனநாயகத்தில், நாடாளுமன்றம் என்பது இறையாண்மை மிக்க, சுயாட்சி மிக்க ஒரு அமைப்பு. அது சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அதன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.
தெலுங்கானா பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார் சிங்.












Click it and Unblock the Notifications