நில மோசடி வழக்கில் ராசாத்தி அம்மாளின் கணக்காளர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திமுக தலைவர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளின் கணக்காளரான ரமேஷ் இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தி்ல ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த நிர்மலா தேவி உள்ளிட்ட 31 பேர் நில அபகரிப்புப் புகார் கொடுத்தனர்.
அதில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை ரமேஷ் மிரட்டிப் பறித்துக் கொண்டதாக கூறியிருந்தனர். தான் ராசாத்தி அம்மாளிடம் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும், எனவே என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வந்த போலீஸார் இன்று ரமேஷைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications