சீனாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 20 பேர் பலி!
பெய்ஜிங்: சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ளது இந்த மாகாணம். இந்தப் பகுதியில் கடந்த பல காலமாகவே தீவிரவாதிகள் ஊடுருவல் இருந்து வருகிறது. சீன அரசுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், அதை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறது சீனா.
இந் நிலையில் பாகிஸ்தானின் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி முகாம்கள் அமைத்துள்ளது.
அங்கு பயிற்சி பெறும் தீவிரவாதிகள் ஷின்ஜியாங் மாகாணத்தில் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுவரை சிறிய அளவிலேயே தாக்குதல் நடத்தி வந்த இந்த அமைப்பு கடந்த இரு நாட்களாக ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் என்ற இடத்தில் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குண்டுகளையும் வெடிக்கச் செய்தனர். ஒரு ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதற்கு தீ வைத்தனர். இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை சீன போலீசார் சுட்டு்க் கொன்றுவிட்டனர்.
இத் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்று சீனா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான சீனாவே அந்த நாடு மீது புகார் கூறி்யுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் ஒரு பகுதியை சீனாவுக்கு அந்த நாடு தாரை வார்த்ததும், இப்போது அந்தப் பகுதி வழியாகத்தான் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் சீனாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதி வழியாகத் தான் சீனா-பாகிஸ்தான் இடையே பெரும்பாலான சரக்குப் போக்குவரத்தும், வர்த்தகமும் நடந்து வருகிறது.
ஷின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்கள், மத சுதந்திரம் கோரி கடந்த ஆண்டுகளாகவே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அதை சீனா ராணுவத்தைக் கொண்டு அடக்கி வருகிறது.
2009ம் ஆண்டு இங்கு நடந்த பெரும் கலவரத்தில் 200 பேரை ராணுவம் கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications