இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க ஜவாஹிருல்லா கோரிக்கை
திண்டுக்கல்: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:
தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி பாடம் தரமற்றது. அதில், முஸ்லிம்கள் நிர்வகிக்கும் ஓரியண்டல் பள்ளிகளில் உள்ள, உருது மொழி படிக்க வாய்ப்பு இல்லை. இதை, தமிழக அரசு ஓராண்டு நிறுத்தி வைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.
கேபிள் டிவி ஒரு சிலரது கையில் முடங்கிப் போய் உள்ளது. தனியார் ஒருவருக்கு, தமிழக மக்கள் அனைவரும் கப்பம் கட்டும் நிலைமாறி, அரசு கேபிள் டிவியை கொண்டு வர, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கவும், கச்சத்தீவை மீட்கவும், இலங்கையில் பொருளாதாரத் தடை விதிக்கவும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications