டெல்லியில் 6 ஏடிம் இயந்திரங்களில் ரூ. 24 லட்சம் கொள்ளை- திருடனுக்கு வலைவீச்சு
புதுடில்லி: ஏ.டி.எம் மையங்களின் ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்த நபர், 6 இயந்திரங்களில் இருந்து 24 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி மங்கல்புரி பகுதியில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. அங்கு மொத்தம் 14 இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் பணம் நிரப்பும் பணியில், தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களாக தீபக்ராணா, பிரதீப் ஆகியோர் பணியாற்றினர். தினமும் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்ப, அவற்றை திறக்கும் ரகசிய குறயீட்டு எண் பிரதீப்பிற்கு தெரிந்து இருந்தது.
இதை பிரதீப்பிடம் இருந்து அறிந்து கொண்ட தீபக்ராணா, 6 ஏ.டி.எம். இயந்திரங்களை திறந்து 24 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தார். ஏ.டி.எம். இயந்திரங்களை ஆய்வு செய்த ஊழியர்கள் 6 இயந்திரங்கள் செயல்படாதது குறித்து, மேலதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
வங்கி அதிகாரிகள் வந்து பணத்தை சரிபார்த்த போது, இயந்திரங்களில் பணம் கொள்ளையடித்து தெரிந்தது. இதையடுத்து தீபக் ராணா தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications