மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் போட்டியி ஹஸாரே தயாரா?-காங். கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகி நாடாளுமன்றம் வந்து கேள்வி கேட்கட்டும் அன்னா ஹஸாரே என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணீஷ் திவாரி.

லோக்பால் மசோதா தொடர்பாக அன்னா ஹஸாரே குழுவினர் கொடுத்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இதனால் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது அன்னா ஹஸாரே குழு. இந்த நிலையில், அன்னாவின் கோரிக்கைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வரும் மத்திய அமைச்சர் கபில் சிபலின் தொகுதியில், கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது அன்னா ஹஸாரே குழு.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கருத்து தெரிவிக்கையில், மக்களை நேரில் சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு அன்னா ஹஸாரே எம்.பியாகட்டும். பின்னர் நாடாளுமன்றத்திற்கு வந்து அவர் கேள்விகள் கேட்கட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம் என்றார்.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறுகையில், லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டும் என்று அன்னா கூறி வருவது மத்தியஅரசுக்கு விடப்படும் பகிரங்க சவாலாகும்.

லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் போவது மக்கள் அதிகாரம் பெற்ற நாடாளுமன்றமா இல்லை அன்னாவா?. அரசியல் சட்டப்படியான அதிகாரம் அன்னாவுக்கு உள்ளதா, நாடாளு்மன்றத்துக்கு உள்ளதா? எனவே நாடாளுமன்றம்தான் லோக்பால் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+