ஆட்டோ டிரைவரைக் கொன்ற வழக்கில் எஸ்ஸார் கோபி தம்பி உள்பட 3 பேர் சரண்
மதுரை: ஆட்டோ டிரைவரா காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியான எஸ்ஸார் கோபியின் தம்பி உள்ளிட்ட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி அவனியாபுரம் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வாகனம் மோதி இறந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விபத்து என்பதிலிருந்து மாற்றி கொலையாக போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எஸ்ஸார் கோபியின் தம்பி, அவரது தம்பிகள் மருது, ஈஸ்வரன், அவனியாபுரம் நகராட்சி திமுக கவுன்சிலர் மணிகண்டன், ஊதல்பாண்டி உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோபி ஏற்கனவே நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செந்தில்குமார், பாண்டி,மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோபியின் தம்பி ஈஸ்வரன், குட்டி, காதர் நவாஸ் ஆகிய மூன்று பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications