கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை
பெங்களூர்: கர்நாடகாவில் தாங்கள் திருடர்கள் என்று சந்தேகித்த 10 பேரை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றுள்ளது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள சிக்பல்லபூரில் நேற்று மக்கள் தாங்கள் திருடர்கள் என்று சந்தேகித்த 10 பேரை கல்லாலும், உருட்டுக்கட்டையாலும் அடித்தே கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
ஆந்திராவைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் சிக்பல்லபூர் வழியாக சென்றனர். அப்போது திடீர் என சுமார் 2 ஆயிரம் கிராமத்தினர் அவர்களை வேனில் இருந்து இறக்கினர். போலி நகைகள் விற்பவர்கள் என்று நினைத்து அவர்களை கல்லாலும், உருட்டுக் கட்டையாலும் அடித்துக் கொன்றனர் என்றனர்.
நான் இது போன்ற ஒரு கொடூரத்தை எனது வாழ்நாளில் பார்த்ததேயில்லை. பெரிய, பெரிய கற்களால் அடித்துக் கொன்றனர். கிராமத்தினரின் ஆத்திரத்திற்கு காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications