போலி பைலட் லைசென்ஸ் வழங்கிய விவகாரத்தி்ல 15 வழக்குகள் பதிவு: வயலார் ரவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போலி பைலட் லைசன்ஸ் வழங்கப்பட்ட விவகாரத்தில், 15 வழக்குகள் பதிவாகி உள்ளதாக, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேளவிகளுக்கிடையே மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி அளித்துள்ள பதில் வருமாறு:

துறையின் தொடர் பரிசோதனையில், பைலட் லைசென்ஸ் பெறுவதற்காக பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 15 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த லைசென்ஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், வர்த்தக விமானங்களின் பைலட் லைசென்ஸ் தொடர்பாக 9 வழக்குகளும், விமான போக்குவரத்து பைலட் லைசென்ஸ் தொடர்பாக 6 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

இந்த வழக்குகளில் 3 டி.ஜி.சி.ஏ, அதிகாரிகளும், 11 பைலட்கள், 5 புரேக்கர்கள் என 19 பேரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் முகப்பு இடித்து விபத்தை சந்தித்த ஏர்பஸ் 320 விமானம் குறித்து விசாரித்த போது, பைலட் தேர்வில் சில மோசடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 1704 பைலட் பயிற்சி பெறும் மாணவர்களின் சான்றிதழ்களை பரிசோதித்த போது, இதில், 15 லைசென்ஸ்கள் போலியானவை எனத் தெரிந்தது. உடனடியாக 15 பேருடைய லைசென்ஸ்களும் முடக்கி வைத்து, கைது செய்யப்பட்டனர். பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பைலட் லைசென்ஸ் பெறும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வயலார் ரவி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+