சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து- 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

தீபாவளிப் பண்டிகைக்காக சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இப்போதே பட்டாசுகள் தயாரிப்பு களை கட்டியுள்ளது. இந்த நிலையில், சிவகாசி அருகே காளையார்குறிச்சி என்ற இடத்தில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது.
அங்கு இன்று பட்டாசுகள் வைத்திருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த அறையில் இருந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போயுள்ளதால் யார் யார் உடல்கள் அவை என்ற விவரத்தை உடனடியாக அறிய முடியாமல் போலீஸார் தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications