பாவூர்சத்திரம் அருகே திருமணம் நிச்சயமானவர் விஷம் குடித்து சாவு
Subscribe to Oneindia Tamil
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்நதவர் களஞ்சியர் மகன் கணேசன். இவர் கேரளாவில் சொந்தமாக கடை வைத்துள்ளார். கணேசனுக்கு திருமணம் செய்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன் பெண் பார்த்து நிச்சயித்துள்ளனர்.
இந்நிலையில் வீ்ட்டிற்கு வநத கணேசன் யாருக்கும் தெரியாமல் விஷம் குடித்து விட்டு தனியாக சென்று படுத்து விட்டார். இதையறிந்த உறவினர்கள் அவரை உடனடியாக தென்காசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications