கரூர் மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் உள்ள மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா விமரிசையாக நடந்தேறியது.

கரூர் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில், புகழ்பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கு அடுத்த நாளான ஆடி 19 ம் தேதி அன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் கரூர், திருச்சி, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடாக, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

விழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து தரப்பினரும் தங்கள் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டால், தங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதற்காக மகாதனாபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து தங்களது நேர்த்திக் கடனை பயப்பக்தியுடன் செலுத்தினர். இப்பகுதியில் விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பக்தர்களுக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+