Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்கன் அமெரிக்க தூதரகத்தில் பூனைகள் நடமாட்டம் அதிகரிப்பு-செய்தவறியாமல் ஊழியர்கள் குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

A-Cat takes rest inside US Embassy
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் பூனைகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. இதனால் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் அமெரிக்க தூதரக ஊழியர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

பூனைகளைப் பிடித்துக் கொல்வது அல்லது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்களிடையே வலுத்துள்ளதால், இதுகுறித்து முடிவெடுக்க ஒரு கமிட்டியைப் போட்டுள்ளார் அமெரிக்க தூதர் கிராக்கர்.

காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் வெளியே செல்வது இல்லை. அப்படிச் சென்றால் தீவிரவாதிகளால் தாக்கப்பட நேரிடும் என்பதால் வெளியில் போவதில்லை. இந்த நிலையில் இந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஒரு பெரும் பிரச்சினையை தூதரக ஊழியர்கள் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அது பூனைத் தொல்லை.

இந்த தூதரக வளாகத்தில் கிட்டத்தட்ட 30 பூனைகள் பிக் பாஸ்களாக மாறி உலவி வருகின்றன. இவற்றுக்கிடையே அவ்வப்போது சண்டை மூளும். அப்போது ஏற்படும் சத்தத்தால் ஊழியர்கள் கிடுகிடுத்துப் போய் விடுகிறார்களாம். தலிபான் தீவிரவாதிகளையும், அல் கொய்தா பயங்கரவாதிகளையும் கூட பார்த்துப் பயப்படாத அமெரிக்கர்களுக்கு இந்தப் பூனைச் சத்தம் பெரும் தொந்தரவாக மாறியுள்ளதாம்.

அதை விட அவ்வப்போது எல்லை மீறும் பூனைகள், தூதரக ஊழியர்களை துரத்துவதும், கடிப்பதும் கூட நடப்பதுண்டாம். இதனால் பெரும் தலைவலியாகவே, இந்தப் பூனைகளை என்ன செய்யலாம் என யோசித்தனர். ஊழியர்களில் சிலர், இவற்றைப் பிடித்துக் கொன்று விடலாம் என்று கூறினர். அதற்கு ஒருத ரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அது பாவம், அவற்றைப் பிடித்து வேறு எங்காவது கொண்டு போய் விட்டு விடலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறினர். என்ன செய்தாவது இந்தத்தொலைக்கு முடிவு கட்டுங்கள் என்று ஊழியர்கள் கோரஸாக முறையிடவே இதற்காக ஒரு கமிட்டியைப் போட்டு விட்டார் தூதர் கிராக்கர்.

இந்தக் கமிட்டி தற்போது பூனைகளைக் கொல்லலாமா, நாடு கடத்தலாமா என்பது குறித்து யோசித்து வருகிறதாம். ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்டு அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரவுள்ளனராம்.

இந்தப் பூனைகளை தொல்லையாக நினைக்காத ஊழியர்கள் கூறுகையில், நாடு, வீடு, உறவினர்கள் என அனைத்தையும் விட்டு, இங்கு வேலை செய்யும் எங்களுக்கு இந்த பூனைகள் பெரும் ஆறுதலாக உள்ளது. நகரின் வெளிப் பகுதிகளுக்கு போக எங்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் நடப்பதற்கு கூட சுரங்கப் பாதையை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மன உளைச்சல் அடையும் போது, அவற்றை பார்த்து, பழகி ஆறுதல் அடைகிறோம். பூனைகளும் எங்களுடன் மிக பாசமாக உள்ளன, என்கின்றனர்.

பூனைகளை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவற்றை விரும்புவோர் எதிர்ப்பு தெரிவி்த்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பூனைகளை விரும்புவோருக்கு தற்போது 60 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் பூனைகளுக்கு தகுந்த மற்றொரு இடத்தை அமைத்து பராமரித்து கொள்ள வேண்டும். 60 நாட்களுக்கு பிறகு தூதரகத்தில் சுற்றித் திரியும் பூனைகளை துரத்த நடவடிக்கை எடுக்கப்படும், என பூனை கட்டுபாட்டுக் குழு கூறியுள்ளது.

ஆனால் பூனை விரும்பிகள் பூனைகளை அப்புறப்படுத்துவதற்கு தங்களது அதிருப்தியைத் தெரிவிக்க எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பூனைப் படத்தைப் போட்ட வாசகத்தை எழுதி அதைத் தட்டி வடிவில் தூதரக வளாகத்தில் வைத்துள்ளனர்.

பேசாமல், அமெரிக்க காங்கிரஸை (நாடாளுமன்றத்தைக்) கூட்டி விவாதம் வைத்து முடிவு செய்யலாமே?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+