ஆப்கன் அமெரிக்க தூதரகத்தில் பூனைகள் நடமாட்டம் அதிகரிப்பு-செய்தவறியாமல் ஊழியர்கள் குழப்பம்!

பூனைகளைப் பிடித்துக் கொல்வது அல்லது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்களிடையே வலுத்துள்ளதால், இதுகுறித்து முடிவெடுக்க ஒரு கமிட்டியைப் போட்டுள்ளார் அமெரிக்க தூதர் கிராக்கர்.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் வெளியே செல்வது இல்லை. அப்படிச் சென்றால் தீவிரவாதிகளால் தாக்கப்பட நேரிடும் என்பதால் வெளியில் போவதில்லை. இந்த நிலையில் இந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஒரு பெரும் பிரச்சினையை தூதரக ஊழியர்கள் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். அது பூனைத் தொல்லை.
இந்த தூதரக வளாகத்தில் கிட்டத்தட்ட 30 பூனைகள் பிக் பாஸ்களாக மாறி உலவி வருகின்றன. இவற்றுக்கிடையே அவ்வப்போது சண்டை மூளும். அப்போது ஏற்படும் சத்தத்தால் ஊழியர்கள் கிடுகிடுத்துப் போய் விடுகிறார்களாம். தலிபான் தீவிரவாதிகளையும், அல் கொய்தா பயங்கரவாதிகளையும் கூட பார்த்துப் பயப்படாத அமெரிக்கர்களுக்கு இந்தப் பூனைச் சத்தம் பெரும் தொந்தரவாக மாறியுள்ளதாம்.
அதை விட அவ்வப்போது எல்லை மீறும் பூனைகள், தூதரக ஊழியர்களை துரத்துவதும், கடிப்பதும் கூட நடப்பதுண்டாம். இதனால் பெரும் தலைவலியாகவே, இந்தப் பூனைகளை என்ன செய்யலாம் என யோசித்தனர். ஊழியர்களில் சிலர், இவற்றைப் பிடித்துக் கொன்று விடலாம் என்று கூறினர். அதற்கு ஒருத ரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அது பாவம், அவற்றைப் பிடித்து வேறு எங்காவது கொண்டு போய் விட்டு விடலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறினர். என்ன செய்தாவது இந்தத்தொலைக்கு முடிவு கட்டுங்கள் என்று ஊழியர்கள் கோரஸாக முறையிடவே இதற்காக ஒரு கமிட்டியைப் போட்டு விட்டார் தூதர் கிராக்கர்.
இந்தக் கமிட்டி தற்போது பூனைகளைக் கொல்லலாமா, நாடு கடத்தலாமா என்பது குறித்து யோசித்து வருகிறதாம். ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்டு அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரவுள்ளனராம்.
இந்தப் பூனைகளை தொல்லையாக நினைக்காத ஊழியர்கள் கூறுகையில், நாடு, வீடு, உறவினர்கள் என அனைத்தையும் விட்டு, இங்கு வேலை செய்யும் எங்களுக்கு இந்த பூனைகள் பெரும் ஆறுதலாக உள்ளது. நகரின் வெளிப் பகுதிகளுக்கு போக எங்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் நடப்பதற்கு கூட சுரங்கப் பாதையை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மன உளைச்சல் அடையும் போது, அவற்றை பார்த்து, பழகி ஆறுதல் அடைகிறோம். பூனைகளும் எங்களுடன் மிக பாசமாக உள்ளன, என்கின்றனர்.
பூனைகளை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவற்றை விரும்புவோர் எதிர்ப்பு தெரிவி்த்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பூனைகளை விரும்புவோருக்கு தற்போது 60 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள் பூனைகளுக்கு தகுந்த மற்றொரு இடத்தை அமைத்து பராமரித்து கொள்ள வேண்டும். 60 நாட்களுக்கு பிறகு தூதரகத்தில் சுற்றித் திரியும் பூனைகளை துரத்த நடவடிக்கை எடுக்கப்படும், என பூனை கட்டுபாட்டுக் குழு கூறியுள்ளது.
ஆனால் பூனை விரும்பிகள் பூனைகளை அப்புறப்படுத்துவதற்கு தங்களது அதிருப்தியைத் தெரிவிக்க எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பூனைப் படத்தைப் போட்ட வாசகத்தை எழுதி அதைத் தட்டி வடிவில் தூதரக வளாகத்தில் வைத்துள்ளனர்.
பேசாமல், அமெரிக்க காங்கிரஸை (நாடாளுமன்றத்தைக்) கூட்டி விவாதம் வைத்து முடிவு செய்யலாமே?!
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications