108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்! - ஊழியர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை: 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர மருத்துவத் தேவைகளுக்காக, 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும், அரசு பணியாளர்களுக்காக வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரி்க்கை எழுந்துள்ளது.

மேலும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது, 8 மணிநேர வேலை , அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டை சம்பளம் அல்லது விடுப்பு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் சென்னையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+