அண்ணா வளர்ப்பு மகன் உடலுக்கு, ஸ்டாலின் அஞ்சலி
சென்னை: அண்ணாவின் வளர்ப்பு மகன்களில் ஒருவரான இளங்கோவன் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன்களில் ஒருவர் இளங்கோவன்(68). அண்ணா முதல்வராக இருந்த போது, அவருக்கு கார் டிரைவராக இருந்தவர்.
சென்னை, பட்டினபாக்கம் பகுதியில் உள்ள அரசினர் குடியிருப்பில் வசித்து வந்தார். அண்ணாவின் திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டின் குளியலறையில், தவறி விழுந்த இளங்கோவன், பலத்த காயமடைந்தார். இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் பொதுமக்களின் பார்வைக்காக, அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இளங்கோவனுக்கு, மனைவி, மகள், ஒரு வளர்ப்பு மகன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications