திருவாரூரில் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூரில் நடக்க உள்ள தி.மு.க., பொதுக் கூட்டத்திற்காக வந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூரில் தி.மு.க.,வின் பொதுக்கூட்டம், இன்று மாலை நடக்க உள்ளது. இதில் தி.மு.க.,வினர் மீது போடப்பட்ட பொய் மோசடி வழக்குகளை கண்டித்து, கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி பேசுகிறார்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று காலை கருணாநிதி, திருவாரூர் வந்திறங்கினார். கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திறங்கிய அவருக்கு, தி.மு.க., தொண்டர்கள் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர் உடனே அவரது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications