உடல்நிலை தேறுகிறது... 3 வாரங்களில் இந்தியா திரும்புகிறார் சோனியா!

அடுத்த மூன்று வாரங்களுக்குள் அவர் தலைநகர் டெல்லிக்கு வந்துவிடுவார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் 24 மணி நேரம் கண்காணிப்பில் இருந்தார். அவர் குணம் அடைய பிரார்த்தித்தும் வாழ்த்தியும் தகவல்கள் கொடுத்த அனைவருக்கும் சோனியாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
சோனியா தற்போது சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்,' என்று காங்கிரஸின் ஊடகத் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.
சோனியா - ராகுல் இல்லாமல் கூடிய காங்கிரஸ் கூட்டம்
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி இல்லாமல் கூடும் முதல் கூட்டம் இதுவே.
காமன்வெல்ட் ஊழலில் பிரதமர் அலுவலகத்தை தொடர்புபடுத்தி சிஏஜி வெளியிட்ட அறிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications