நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: டி.என்.பி.எஸ்.சி.யின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு நாளை (அக்.7) காலை நடக்க உள்ளது.
தமிழக அரசின் அமைச்சுப்பணி மற்றும் நீதித்துறை பணியில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு போட்டித் தேர்வு நடக்க உள்ளது. இதில், 145 இளநிலை உதவியாளர், 106 தட்டச்சர், 17 சுருக்கெழுத்தர் மூலம் பின்னடைவு காலி பணி இடங்களை சிறப்பு போட்டித்தேர்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இந்த பணிக்கு சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நாளை (ஆக.07 ஞாயிற்றுக்கிழமை) காலை தேர்வு நடக்கிறது.












Click it and Unblock the Notifications