மதுரை திமுக பகுதி செயலாளர் ஒச்சு பாலு திடீர் கைது
மதுரை: மதுரையில் திமுக பகுதிச் செயலாளரும், முன்னாள் வேளாண்மை விற்பனைக் குழு வாரியத் தலைவருமான ஒச்சு பாலு நில அபகரிப்பு மற்றும் வீட அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
நில அபகரிப்பு, வீடு அபகரிப்பு புகார்களில் மதுரையில் ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் ஒச்சு பாலுவும் சேர்ந்துள்ளார்.
சாதாரண பகுதி செயலாளரான திடீரென கோடீஸ்வரராக உயர்ந்தவர். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்து வந்தன. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்பட்டதில்லை.
இந்த நிலையில் மதுரை பரமேஸ்வரி தியேட்டருக்கு அருகே ஒரு காலி இடத்தை அபகரித்து விட்டதாகவும், ஒரு வீட்டை அபகரித்து விட்டதாகவும் ஒச்சு பாலு மீது புகார் வந்தது. இதை விசாரித்த போலீஸார் நேற்று கரிமேட்டில் உள்ள பாலு வீட்டுக்குச் சென்று அவரைக் கைதுசெய்து கூட்டிச் சென்றனர்.
திடீர் நகர் காவல் நிலையத்தில் வைத்து ஒச்சு பாலுவை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications