தேவை அதிகரிப்பு: ஓமனில் இருந்து 27131 டன் யூரியா இறக்குமதி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தென்மாநிலங்களின் தேவைக்காக ஓமன் நாட்டிலிருந்து 27 ஆயிரத்து 131டன் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. கப்பல் மூலம் இந்த உரம் இன்று தூத்துக்குடி வருகிறது.
தமிழகம், ஆந்திரம், கர்நாடகா மற்றும் கேரளாவில் பரவலாக வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதனால் யூரியா உரத்தி்ன தேவை அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க ஓமன் நாட்டிலிருந்து 27 ஆயிரத்து 131டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஓமனில் இருந்து எம்வி வாலோர் எஸ்டபுள்யூ என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு யூரியா மூட்டைகள் இன்று வருகிறது.
பின்னர் இங்குள்ள குடோன்களுக்கு அவை கொண்டு செல்லப்படும். இதில் 900 டன் யூரியா தூத்துக்குடி மாவட்டத்திற்கும், மீதமுள்ள உரம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications