நெல்லை அதிமுக நிர்வாகி கொலை:கூலிப்படைக்கு பணம் கொடுத்த வக்கீல் யார்- விசாரணை
நெல்லை: நெல்லை அதிமுக நிர்வாகி கொலையில் கூலிப்படையினருக்கு பணம் கொடுத்த வழக்கறிஞர் யார் என்பது குறித்து கொலையாளிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பாளையம் அருகே உள்ள மேலநந்தம் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி சுப்பு.கொக்கிரகுளத்தில் பால் பண்ணை நடத்தி வந்த இவர் கடந்த மார்ச் 9-ம் தேதி உடையார்பட்டி அருகே பைக்கில் சென்றபோது மர்ம கும்பலால் வழிமறித்து கொலை செய்யப்பட்டார்.இது குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி கம்மாளன்குளத்தைச் சேர்ந்த பெருமாள்,சுத்தமல்லி சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் கூலிக்காக கொலை செய்தது தெரிய வந்தது.இதற்காக வழக்கறிஞர் ஒருவர் ரூ. 1.5 லட்சத்தை சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த ஸ்டேட் மணி என்பவரிடம் கொடுத்துள்ளார்.மணி கூலிப்படைக்கு ரூ.1 லட்சம் கொடுத்து சுப்புவை தீர்த்து கட்டியுள்ளார்.
தச்சநல்லூரி்ல் ஒரு பிரிவினருக்கு சொந்தமான கோவிலும்,திருமண மண்டபமும் உள்ளது.இதை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர அதே பிரிவைச் சேர்ந்த இரு கோஷ்டியினர் அடிக்கடி மோதி வந்தனர்.இந்நிலையில் ஒரு கோஷ்டிக்கு ஆதரவாக தச்சநல்லூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் செயல்பட்டு வந்தார்.இதனால் ஆத்திரமடைந்த எதிர் கோஷ்டியினர் வேல்முருகனை கொல்ல கூலி படையினரை ஏற்பாடு செய்தனர். ஆனால் கூலி படையினர் வேல்முருகனுக்கு பதிலாக பால் வியாபாரி சுப்புவை ஆள்மாறாட்டத்தில் கொலை செய்தனர்.
இவ்வழக்கில் தேடப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த ரமேஷ்,ராஜு,முருகேசன்,சங்கரநாராயணன்,கூலிப்படைத் தலைவன் ஸ்டேட் மணி, தச்சநல்லூரைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைநதனர்.இதில் ஸடேட் மணி,சங்கரநாராயணன்,முருகேசன்,வெங்கடேசன் ஆகியோரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதன்படி நேற்று 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications