அரசு கேபிள் டிவியில் சேர இன்று கடைசி நாள்: ஆபரேட்டர்கள் முந்தியடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு கேபிள் டிவியில் சேர 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். பெயர்களைப் பதிவு செய்ய இன்று தான் கடைசி நாள்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு கேபிள் டிவியை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் கண்காணிப்பில் இந்த பணிகள் நடந்து வருகிறது. அரசு கேபிள் டிவிக்கென்று தனியாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசு கேபிள் டிவி செயல்படத் துவங்கும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. முதல்வர் ஜெயலலிதா கேபிள் டிவி ஆபரேட்டர்களை சந்தித்து பேசினார். பின்னர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் சேருமாறு அவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு சேர விரும்புபவர்கள் www.arasucable.com என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 5-ம் தேதி வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

ஏராளமானோர் பதிவு செய்து வருவதால் கால அவகாசம் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதால் ஆபரேட்டர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பதிவு செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+