திருப்பூர் மேயர் செல்வராஜ் மீது நிலமோசடி வழக்கு பதிவு- கைதாகிறார்
திருப்பூர்: ஈரோடு மேயரைத் தொடர்ந்து தற்போது திருப்பூர் திமுக மேயரும் நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் இவரும் கைதாகவுள்ளார்.
ஈரோடு மாநகராட்சியின் திமுக மேயர் சமீபத்தில் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜாவுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருப்பூர் மேயரும் சிக்குகிறார்.
கேரளா மாநிலம் தலசேரியை சேர்ந்த தினேஷ் காணி என்பவர் திருப்பூர் இந்தியன் வங்கியில் 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். இதற்கு ஜாமீனாக திருப்பூர், காந்தி நகர் இ.பி.காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சாமாத்தாளும் (53), பாத்திமா நகரை சேர்ந்த ஜெகதாம்பாளும் தங்கள் சொத்து பத்திரங்களை வழங்கினர். ஆனால் தினேஷ்காணி கடன், வட்டியை திரும்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் உத்தரவாதம் கொடுத்த சாமாத்தாள், ஜெகதாம்பாளுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து இருவரும் வழக்கு தொடுத்தனர். தினேஷ்காணியின் கம்பெனியில் உள்ள அசையும் சொத்துகளை மட்டும் ஜப்தி செய்ய கோர்ட் அனுமதி அளித்தது.
இதையறிந்த திருப்பூர் மேயர் செல்வராஜ் மற்றும் சரவணகுமார், ரகுபதி, ஜெயக்குமார், சுப்பிரமணி ஆகியோர் சாமாத்தாள் வீட்டுக்கு சென்று, வங்கி பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன், அந்த நிலத்தை சரவணகுமார், ரகுபதி பெயரில் கிரயம் செய்து கொடுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சாமாத்தாள், திருப்பூர் மேயர் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தனது 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். இதற்காக வங்கி அதிகாரி ஒருவர் உதவியுடன் ரகுபதிக்கு பெயர் மாற்றம் செய்துள்ளதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு மையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து, திருப்பூர் மேயர் செல்வராஜ் மற்றும் சரவணகுமார், ரகுபதி, ஜெயக்குமார், சுப்பிரமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் செல்வராஜ் விரைவில் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications