For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணப்பாறை அருகே கிராமத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி- பாதியில் நிறுத்திய போலீசார்

Google Oneindia Tamil News

மணப்பாறை: மணப்பாறை அருகே நடந்த ஆபாச நடனத்தை போலீசார் பாதியிலேயே நிறுத்தினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆமநக்கம்பட்டியில் உள்ள இளைஞர்கள் மன்றம் சார்பில் ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு நடத்தப்பட்டது. இதைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர்.

அதில் மதுரையைச் சேர்ந்த ஒரு நடனக்குழுவினர் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது நடனக்குழுவினர் திடீரென ஆபாசமாக ஆடினர். இதைக் கண்டு பொதுமக்கள் பலர் முகம் சுளித்தனர்.

இதில் ஆவேசமடைந்த சிலர் இந்த ஆபாச நடனம் குறித்து திருச்சி எஸ்.பி லலிதா லட்சுமிக்கு மொபைல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். எஸ்.பி. உத்தரவின் பேரில், மணப்பாறை இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இந்நிகழச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Manappari police stopped obscene dance in a village. Members of the dance group from Madurai, danced for obscene cinema songs. Angered over this women from the village passed the messge to Police SP Lalitha Lakshmi. On her order, police rushed to the village and stopped the programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X