டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதம் இருக்க ஹஸாரேவுக்கு அனுமதி

லோக்பால் வரைவு மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் அதில் ஹஸாரே குழுவினர் கொடுத்திருந்த பரிந்துரைகள் எதுவுமே இடம் பெறவில்லை. இதையடுத்து மத்திய அரசின் வரைவு மசோதாவை கடுமையாக கண்டித்த ஹஸாரே குழுவினர், இது ஊழலை ஒழிக்க உதவாது என்று விமர்சித்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த ஹஸாரே, ஆகஸ்ட் 16-ம் தேதி திட்டமிட்டபடி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தித்தார்.
ஹஸாரேவின் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு அனுமதி அளித்ததோடு ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானதுக்கு அருகில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் உண்ணாவிரத்ததை மேற்கொள்ளுமாறு டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை அன்னா ஹஸாரே அணியின் உயர்மட்டக் குழு கூடியது. இதில் ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் ஹஸாரே செய்தியாளர்களிடம் கூறியதாவது,
டெல்லி போலீசார் ஒதுக்கியுள்ள இடம் நல்ல நிலையில் உள்ள இடம். அது திருப்தி அளிப்பதாக உள்ளது. உண்ணாவிரதத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி உயர் மட்டக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications