'அட்டாக்' பாண்டி மீது குண்டாஸ்-ரத்து செய்ய மனைவி தயாளு கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளிகளில் ஒருவரான அட்டாக் பாண்டி மீது பிரயோகிக்கப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி தயாளு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார்.

மதுரையை நடு நடுங்க வைத்த மோசமான ஆட்களில் இந்த அட்டாக் பாண்டியும் ஒருவர். கிட்டத்தட்ட கூலிப்படையினரை போலவே செயல்பட்டு வந்தவர் இவர் என்று மதுரை மக்கள் கூறுகிறார்கள். தினகரன் நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளி இவர். இவர்தான், அலுவலகத்திற்குள் தீவைத்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழக்கக் காரணமாக இருந்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் கடந்த திமுக ஆட்சியின்போது பாண்டி உள்ளிட்ட அத்தனை பேரும் சிந்தாமல், சிதறாமல் வெளியே வந்து விட்டனர்.

இப்போது அதிமுக ஆட்சியில் அட்டாக் பாண்டியை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்து உள்ளே போட்டுள்ளனர். அவர் மீது குண்டர் சட்டத்தையும் பிரயோகித்து ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாமல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அட்டாக் பாண்டியி்ன் மனைவி தயாளு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்குத் தொடர்நதுள்ளார். அதில், என் கணவர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு, பொய்யான வழக்கில் மதுரை போலீசார் குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர்.

பொய்யான வழக்கில் போடப்பட்ட அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தயாளு.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி காவல்துறை டிஜிபி ராமானுஜம், மதுரை மாநகர காவல்து ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் ஜனார்த்தன ராஜா மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+