மனித உரிமை மீறல் வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ரூ.50,000 அபராதம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: மனித உரிமை மீறிய வழக்கில், ஊட்டி இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிமொழி. இவர் தற்போது ஊட்டியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு குழித்துறையை சேர்ந்த வக்கீல் அசோக்குமார், ஒரு வழக்கு தொடர்பாக நித்திரவிளை காவல் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது வக்கீல் அசோக்குமாருக்கும், இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மணிமொழி, வக்கீல் அசோக்குமாரை லாக்கப்பில் அடைத்து வைத்து தாக்கியுள்ளார்.

தன்னை விதிமுறைகளுக்கு புறம்பாக இன்ஸ்பெக்டர் மணிமொழி லாக்கப்பில் தள்ளி, அவர் மனித உரிமையை மீறி செயல்பட்டதாக வக்கீல் அசோக்குமார் நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் மணிமொழி பணிபுரிந்த பல்வேறு போலீஸ் நிலையங்களிலும், சமூக சேவர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர் என பலதரப்பினருடன் பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பல ஊர்களுக்கு இடமாற்றம் கொடுத்து அனுப்பிய காவல் துறை தலைமை, மணிமொழி மீது ஆரம்பத்திலேயே துறை ரீதியான நடவடிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் காவல்துறைக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது என போலீசார் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+