மனித உரிமை மீறல் வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ரூ.50,000 அபராதம்
நாகர்கோவில்: மனித உரிமை மீறிய வழக்கில், ஊட்டி இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிமொழி. இவர் தற்போது ஊட்டியில் இன்ஸ்பெக்டராக உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு குழித்துறையை சேர்ந்த வக்கீல் அசோக்குமார், ஒரு வழக்கு தொடர்பாக நித்திரவிளை காவல் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது வக்கீல் அசோக்குமாருக்கும், இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மணிமொழி, வக்கீல் அசோக்குமாரை லாக்கப்பில் அடைத்து வைத்து தாக்கியுள்ளார்.
தன்னை விதிமுறைகளுக்கு புறம்பாக இன்ஸ்பெக்டர் மணிமொழி லாக்கப்பில் தள்ளி, அவர் மனித உரிமையை மீறி செயல்பட்டதாக வக்கீல் அசோக்குமார் நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இன்ஸ்பெக்டர் மணிமொழிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் மணிமொழி பணிபுரிந்த பல்வேறு போலீஸ் நிலையங்களிலும், சமூக சேவர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர் என பலதரப்பினருடன் பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பல ஊர்களுக்கு இடமாற்றம் கொடுத்து அனுப்பிய காவல் துறை தலைமை, மணிமொழி மீது ஆரம்பத்திலேயே துறை ரீதியான நடவடிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் காவல்துறைக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது என போலீசார் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.
-
Yuvan: மயில் போல பொண்ணு ஒன்னு.. தேவயானி மகள் பாடிய பாடல்! கலங்கிய யுவன்! உருக்கமாக சொன்ன விஷயம் -
பல லட்சம் பேர் வருவாங்க.. சிக்கல்.. நீதிபதி சுவாமிநாதன் சொன்னது என்ன? தமிழக அரசு பிடித்த பாயிண்ட் -
சென்னை எல்லாம் லெப்டில் போலாம்.. திருச்சி சத்தமே இல்லாமல் படைத்த சாதனை.. அதுவும் நம்பர் 1 ஆமே! -
12 பொதுத்துறை வங்கிகளை இணைத்து.. 4 ஆக குறைக்கும் திட்டம்.. கடன் வாங்க காத்திருந்தவர்களுக்கு.. செக் -
அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. இது டாடிஸ் ஆர்மி இல்ல.. சில்ட்ரன்ஸ் ஆர்மி! தெறிக்கும் சிஎஸ்கே மீம்ஸ் -
Rasi Palan: சனியின் அருளால் தனுசு, மகர ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பண மழை கொட்டப் போகுது -
மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்! -
விரைவில் வாரம் 4 நாள் மட்டுமே வேலை.. 3 நாள் சம்பளத்துடன் லீவு.. மத்திய அரசு சொன்ன குட்நியூஸ் -
திருப்பரங்குன்றம்: "குரலை உயர்த்தாதீங்க"! CISF வீரர்களை வைத்து வழக்கறிஞரை வெளியேற்றிய நீதிபதிகள்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -
யார் அந்த பெண்? சிஎஸ்கே ஏல மேடையில் முதல்முறையாக நடந்த மாற்றம்.. அதிர்ஷ்டத்தை கொண்டு வருவாரா -
சிறகடிக்க ஆசை: குடும்பத்தில் நடந்த பிரச்சனை, ரோகிணி பற்றிய உண்மையை சொல்லும் மீனா! அடிதடியில் இறங்கிய முத்து












Click it and Unblock the Notifications