மதுரை அரசு மருத்துவமனையில் குடிபோதையில் ரகளை செய்த டாக்டர்!
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையி்ல் இரவு பணியில் இருந்த டாக்டர், குடிப்போதையில் ரகளையில் ஈடுபட்டதால், நர்ஸ்களும், நோயாளிகளும், மருத்துவமனை பணியாளர்களும் திணறினர்.
மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இரவுப் பணியில் டாக்டர் ஈடுபட்டிருந்தார். நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில், டாக்டர் மது அருந்தினார். பின்னர், சீருடைகளை களைந்துவிட்டு, கைலியை கட்டிக் கொண்டார்.
அதிக ரவுண்டுகள் வந்த டாக்டருக்கு காலையான பிறகும், போதை தெளியவி்ல்லை. அப்படியே படுத்து கிடந்தார். அதிகாலை முதல் நோயாளிகள் வர துவங்கியதால், மருத்துவமனை நர்சுகள் மற்றும் வார்டு பாய்கள் வந்து டாக்டரை எழுப்பும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால், போதையில் கடுப்பான டாக்டர் கைலியையும் அவிழ்த்துவிட்டு, எழுப்ப வந்த நர்ஸ்கள், வார்டு பாய்களை ஆபாசமாகத் திட்டினார்.
இதையடுத்து நர்சுகள் மருத்துவமனை துணைக் கண்ணிப்பாளர் ராமானுஜத்திடம் புகார் கூறினர்.
இதையடுத்து அவரும் மருத்துவமனை அதிகாரிகள் பிரகதீஸ்வரன், பெருமாள் மற்றும் டாக்டர்கள் விரைந்து சென்று அந்த டாக்டரிடம் பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அவரச சிகிச்சை பிரிவில் காலை பெரும் பரபரப்பு நிலவியது.
மேற்கண்ட குடிக்கார டாக்டர் பலமுறை இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை அதிகாரிகள் முடிவு செய்து 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை நியமித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications