தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எல்.ஏக்கள் லேப்டாப் வாங்க முதல்வர் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து லேப்டாப்களை வாங்கிக் கொள்ளலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல எம்.எல்.ஏக்களுக்கும் லேப்டாப் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அவர்கள் தங்களுக்குத் தேவையான லேப்டாப்களை வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+