ஜெ அன்பழகன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை!
Subscribe to Oneindia Tamil

கோவை பேப்பர் மில் அபகரிப்பு வழக்கில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. அதன்படி அவர் நாளை முதல் 15-ந்தேதி வரை 3 நாட்கள் தினசரி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜராகவேண்டும்.
அதன் பின்னர் 16-ந்தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தினசரி காலை 8 மணிக்கு கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications