11 பெண்களை கொன்று புதைத்த கொலையாளிக்கு மரணத் தண்டனை

அமெரிக்க நாட்டின் ஒஹியோவில் உள்ள க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி சோவல். கடந்த 2009ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடர்பாக, ஹலாவின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, கைது செய்யப்பட்டார். சோவலிடம் நடத்திய விசாரணையில், போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
சந்தேகத்தின் பேரில் சோவல் வீடு உள்ள பகுதியில் தோண்டிய போது, சமீபத்தில் புதைக்கப்பட்ட 2 பெண் உடல்கள் கிடைத்தன. இவற்றை ஆராய்ந்த போது, கற்பழித்து கொல்லப்பட்டிருந்தது தெரிந்தது. போலீசார் வீட்டை சுற்றிலும் உள்ள மற்ற பகுதிகளையும் தோண்டிய போது அடுத்தடுத்து பெண் உடல்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடைத்தன. அந்த உடல்களை குறித்து விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக தேடப்பட்ட பெண்ணின் உடல் என்பது தெரிந்தது.
அதின் பின் சோவலிடம் நடத்திய தொடர் விசாரணையில், அப்பகுதியில் காணாமல் போன 11 பெண்களை கற்பழித்து கொலை செய்து, அவர்களின் உடலைகளை தனது வீட்டை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் புதைத்து வைத்திருந்தது கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் தன் கொலை வேட்டையை துவக்கிய சோவல், பெண்களை பேச்சில் மயக்கி, போதை மற்றும் மதுபானங்கள் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அதன்பின் அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுவார். கொலை செய்த பெண்களின் உடல்களை தன் வீட்டை சுற்றிலும் புதைத்துள்ளார்.
தொடர்ந்து 11 பெண்களின் உடல்களை புதைக்கப்பட்டதால், அப்பகுதி எங்கும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டது. ஆனால், அப் பகுதியினர் அருகில் இருந்த தொழிற்சாலையின் மீது சந்தேகப்பட்டனர். பின்னாளில், தொடர் கொலைகள் குறித்து தெரியவந்தது. சோவலிடம் சிக்கிய பெண்கள் அனைவரும் கருப்பின மக்கள். இதில் சிலர் குற்றப் பிண்ணனிக் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
சோவலை மீது, பெண்களை கடத்துதல், கற்பழித்தல், கொடுமைப்படுத்துதல், கொலை செய்தல், சாட்சிகள் மற்றும் தடயங்களை மறைத்தல் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். ஒஹியோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சோவலின் வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தொடர் கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஆண்டனி சோவலுக்கு மரணத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பிற்குப் பிறகு சோவல் கூறுகையில், நான் செய்தது தவறுதான். இருந்ததாலும் எல்லாரிடமும், எல்லாவற்றிற்காகவும் மன்னிப்பு கேட்கிறேன். இது என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்தது", என்றார்.












Click it and Unblock the Notifications