பத்மநாபசுவாமி கோயில் அறை திறப்பை எதிர்த்து வழக்கு தொடர்கிறது மன்னர் குடும்பம்!
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 வது ரகசிய அறையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்துக்கு போக முடிவு செய்துள்ளது மன்னர் குடும்பம்.
பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளைத் திறந்து பொற்குவியலை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 5 அறைகள் திறக்கப்பட்டன. அவற்றில் ரூ. 5 லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருந்தன.
இதைத்தொடர்ந்து கடைசியாக பி நில வறையை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மன்னர் குடும்பம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அறையை திறந்தால் நாட்டுக்கு பேராபத்து ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனால் பி அறையை திறப்பதற்கு முன்பு தேவபிரசன்னம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யக் கூடாது என்றும் பி அறையை திறப்பவர்களின் வம்சமே விஷஜந்துகள் கடித்து அழிந்து விடும் என்றும் ஜோதிடர்கள் எச்சரித்தனர்.
இதற்கிடையே உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்தபோஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட மதிப்பீட்டு குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் பொக்கிஷங்களை மதிப்பிடுவது பி நிலவறையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மன்னர் குடும்பத்தின் கடைசி மன்னரான உத்திராடம் திருநாள் மார்த்தண்டவர்மா, ராமவர்மா ஆகியோர் பி நிலவறையை திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொற்குவியலை கணக்கிடவும் அவற்றை காட்சி பொருளாக வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தேவபிரசன்னத்தில் ஜோதிடர்கள் கூறியப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications