பத்மநாபசுவாமி கோயில் அறை திறப்பை எதிர்த்து வழக்கு தொடர்கிறது மன்னர் குடும்பம்!
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 வது ரகசிய அறையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்துக்கு போக முடிவு செய்துள்ளது மன்னர் குடும்பம்.
பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளைத் திறந்து பொற்குவியலை மதிப்பீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 5 அறைகள் திறக்கப்பட்டன. அவற்றில் ரூ. 5 லட்சம் கோடி பொக்கிஷங்கள் இருந்தன.
இதைத்தொடர்ந்து கடைசியாக பி நில வறையை திறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மன்னர் குடும்பம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அறையை திறந்தால் நாட்டுக்கு பேராபத்து ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனால் பி அறையை திறப்பதற்கு முன்பு தேவபிரசன்னம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யக் கூடாது என்றும் பி அறையை திறப்பவர்களின் வம்சமே விஷஜந்துகள் கடித்து அழிந்து விடும் என்றும் ஜோதிடர்கள் எச்சரித்தனர்.
இதற்கிடையே உச்சநீதிமன்றம் அமைத்துள்ள தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்தபோஸ் தலைமையிலான 5 பேர் கொண்ட மதிப்பீட்டு குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் பொக்கிஷங்களை மதிப்பிடுவது பி நிலவறையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மன்னர் குடும்பத்தின் கடைசி மன்னரான உத்திராடம் திருநாள் மார்த்தண்டவர்மா, ராமவர்மா ஆகியோர் பி நிலவறையை திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பொற்குவியலை கணக்கிடவும் அவற்றை காட்சி பொருளாக வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தேவபிரசன்னத்தில் ஜோதிடர்கள் கூறியப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications