கேரளாவில் நடந்த புகழ்பெற்ற பாம்புப் படகுப் போட்டி-தமிழக வீரர்களும் பங்கேற்பு

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள புன்னமாட ஆற்றில் ஆண்டுதோறும் படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
கடந்த 1952ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு கேளராவிற்கு வந்தபோது, அவரை சுற்றுலாவிற்காக, கோட்டயத்தில் இருந்து ஆலப்புழா வரை படகில் அழைத்து செல்லப்பட்டார். அப்போது, இந்த படகுப் போட்டியைக் கம்ட நேருவுக்கு அது மிகவும் கவர்ந்தது.
டெல்லி சென்ற அவர், தனது கையெழுத்திட்ட வெள்ளிக் கோப்பையை பரிசாக வழங்குமாறு கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அன்றுமுதல், இந்த போட்டிக்கு அவரது பேரிலேயே சுழற்கோப்பை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான 59 வது போட்டியை நேற்று மதியம் 2.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே மிகப் பெரிய படகுப் போட்டியான இதில், 19 பாம்பு படகுகள் உட்பட 59 படகுகள் போட்டியி்ல் கலந்து கொண்டன. 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டவர் உட்பட 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் உற்சாகத்தை பெற்ற போட்டியாளர்கள் படகுகளை தண்ணீரில் வேகமாக செலுத்தினர்.
இதில், கொல்லம் ஜீசஸ் போட் அணியை சேர்ந்த தேவாஸ் சூடன் கோப்பையை தட்டிச் சென்றனர். இரண்டாவதாக கரிச்சல் சூன்டன் அணியினர் வந்தனர். வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்க, பார்வையாளர்கள் கரவொளி வலுத்தது.
இந்த போட்டியில், சென்னையை சேர்ந்த மெட்ராஸ் இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த 51 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
கடந்தாண்டு உலகப் கோப்பை கால்பந்துப் போட்டியில், தங்க ஷூ பரிசுப் பெற்ற ஜெர்மன் வீரர் தாமஸ் முல்லர் மற்றும் குடும்பத்தினர் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications