5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முன்ற ஆட்டோ டிரைவருக்கு அடி
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முன்ற ஆட்டோ டிரைவருக்கு அடிஉதை விழுந்தது.
கொடைக்கானலைச் சேர்ந்த மணி (28). திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். மணி வீட்டுக்கு அருகில் வீதியில் 5 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அந்த சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மணி, பாலியல் தொல்லை செய்துள்ளார். இதையடுத்து வெளியே வந்த சிறுமி, அழுது கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், விசாரித்த போது நடந்த உண்மையை அந்த சிறுமி கூறியுள்ளாள்.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள், மணியை அடித்து உதைத்தனர். அத்துடன் போலீசாரிடம் மணியை ஒப்படைத்தனர்.
படுகாயம் அடைந்த மணியை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர்












Click it and Unblock the Notifications