அன்னாவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆதரவு-போராட்டத்தில் குதித்தனர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் திஹார் சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பலர் டெல்லி சத்ரசால் அரங்கில் கூடி அன்னாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
பல்வேறு அமைப்புகளும் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அன்னா விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்னா எந்தநேரமும் சிறையை விட்டு வெளியே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications