சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் இளைஞர் காங். மனு

இதுகுறித்து மனு கொடுத்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் கூறுகையில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களை இழிவுபடுத்தியும் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தோம். சீமான் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று பேசி வருகிறார்கள். இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். உடனடியாக அவர்களை தூக்கிலிடவேண்டும். நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட தீர்ப்பை பொதுக்கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளோம்.
இது பற்றி பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதில் அளித்தார். சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார். இதே போக்கு நீடித்தால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருப்போம்.
அதே நேரத்தில் எங்களுக்கு விடுதலை புலிகள்தான் எதிரானவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்களை குற்றவாளியாக பார்க்கவேண்டும்.
தமிழர்களின் உணர்வுகளை இதில் சேர்க்கவேண்டாம். சீமான் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக அடுத்தகட்டமாக தகுந்த பதில் அடி கொடுப்போம். இளைஞர் காங்கிரசை பொறுத்தவரை அமைதியாக இருக்க மாட்டோம் என்றார்.
முன்னதாக சத்தியமூர்த்தி பவனிலிருந்து டிஜிபி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர் காங்கிரஸார். அவர்கள் கொடுத்த மனுவில்,
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிராகவும், தூக்குதண்டனை கைதிகளை ஆதரிப்பதும் நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ராஜீவ்காந்தி படுகொலை தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இன்று குரல் கொடுப்பவர்கள் நாளை அப்சல் குருவையும் விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தயங்க மாட்டார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நிலைமையை காரணமாக கொண்டு தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி அதனால் வெடிகுண்டு கலாசாரம் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த 2 பேர் பயங்கரமான வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டருடன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தி படுகொலைக்கு காரணமான தூக்குதண்டனை கைதிகளை ஆதரித்து சென்னையில் நாம் தமிழர் கட்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் வழங்கிய அனுமதியை ரத்துசெய்யவேண்டும். பொதுக்கூட்டத்திற்கு தடையும் விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளனர் காங்கிரஸார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications