சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் மோதல்- ஒருவர் கொலை
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் ஏராளமான மேன்ஷன்கள் உள்ளன. பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் இங்கு தங்கி வேலைக்குச் சென்று வருகின்றனர். சென்னை நகரின் அடையாளங்களில் இந்த திருவல்லிக்கேணி மேன்ஷன்களும் ஒன்று.
அங்குள்ள புதூர் லக்கி மேன்ஷனில் தங்கியிருந்தவர் மூர்த்தி. அவருடன் மேலும் 2 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மற்ற இருவரும் சேர்ந்து மூர்த்தியைக் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மூர்த்தி உயிரிழந்தார்.
இதையடுத்து 2 பேரும் தப்பி விட்டனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலையால் திருவல்லிக்கேணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுளளது.












Click it and Unblock the Notifications