புதவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று (18-ம் தேதி) காலை தொடங்கியது. காலை 11.30 மணிக்கு சட்டசபையில் துணை நிலை ஆளுநர் இக்பால்சிங் உரை நிகழ்த்தினார்.
ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஆளுநர் உரையை வாசிக்கக் கூடாது என்று கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.
பல்வேறு முறைகேடுகள் செய்துள்ள இக்பால்சிங் அரசின் உரையை வாசிக்கத் தகுதி அற்றவர் என்று கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறினர்.
இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications