சுனாமி வீடுகள் ஊழல்: புதுவை கலெக்டர் இன்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2005ம் ஆண்டு சுனாமி வீடுகள் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அம் மாநில கலெக்டர் ராகேஷ் சந்திரா இன்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
சுனாமி வீடுகள் கட்ட சுனாமி புனர்வாழ்வு திட்ட அமலாக்க முகமை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் திட்ட இயக்குனராக ராகேஷ் சந்திராவிடம் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த வீடுகள் கட்டியதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. ராகேஷ் சந்திராவிடம் கடந்த 5ம் தேதி அதிகாரிகள் நேரிலும் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ராகேஷ் சந்திரா புதுவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார்.
இதைத் தொடர்ந்து அவர் 5 நாட்களுக்குள் நேரில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கலெக்டர் ராகேஷ் சந்திரா நேற்று மாலை நீதிபதி ராமசாமி முன் சரணைடைந்தார்.
அப்போது அவருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதில், 20ம் தேதி முதல் 10 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ராகேஷ் சந்திரா இன்று சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
-
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்











Click it and Unblock the Notifications