திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த எலக்ட்ரீசியன் கைது
சென்னை: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கற்பழித்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (22). எலக்ட்ரீசியன். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (22) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்தால் உன்னைத் தான் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார். இதை நம்பிய சுமித்ரா முருகனுடன் நெருக்கமாகப் பழகினார். நெருக்கத்தின் விளைவாக 2 மாத கர்ப்பம் ஆனார்.
கர்ப்பம் அடைந்ததை அடுத்து தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி முருகனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் முருகனோ படு கூலாக கர்ப்பம் தானே அதை யாருக்கும் தெரியாமல் கலைத்துவிடு. 3 ஆண்டுகள் கழி்த்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.
தான் நம்பி மோசம் போனதை உணர்ந்த சுமித்ரா நேராக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து முருகன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications