தங்கமயமாகும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் மூலஸ்தானம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் மூலஸ்தனத்திற்கு தங்கமுலாம் பூசப்படுகிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பெண்களின் சபரி்மலை என்று போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற வந்து செல்லும் பக்தர்கள் பணம் மட்டுமின்றி தங்கம், வெள்ளி நகைகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் தங்க நகைகளின் மதிப்பு பல கோடி என்று கூறப்படுகிறது.
காணிக்கையாக கொட்டிக் கிடக்கும் தங்கத்தை வைத்து ஆற்றுக்கால் பகவதியம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானம் முழுவதையும் தங்க முலாம் பூச கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தங்கத்தை உருக்கி மூலஸ்தானத்தை தங்கமயமாக்கும் பணியை யுஏஏ நிறுவன மேலாளர் ஷெட்டி தொடங்கி வைத்தார்.
மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள வடிவமைப்பு நிபுணர்கள் மூலஸ்தானத்தை தங்கமயமாக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications