10000 பணியாளர்களை நீக்கும் பாங்க் ஆப் அமெரிக்கா!

இதில் 3500 பேரை செப்டம்பர் இறுதிக்குள் நீக்க அந்த வங்கி முடிவு செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
புராஜெக்ட் நியூ பாங்க் ஆப் அமெரிக்கா எனும் பெயரில் மறுசீரமைப்பு முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான பாங்க் ஆப் அமெரிக்கா.
இந்த முயற்சியின் முதல் முக்கிய நடவடிக்கையே, அதிகப்படியாக உள்ள பணியாளர்களைக் குறைத்து செலவைக் கட்டுப்படுத்துவதுதான். அதன்படி மொத்தம் 10000 பேரைக் குறைப்பதென்றும், இதில் முதல் கட்டமாக 3500 பேரை வரும் செப்டம்பருக்குள் நீக்குவதென்றும் முடிவு செய்துள்ளனர்.
இவர்களில் சிலருக்கு ஏற்கெனவே பணிநீக்க உத்தரவும் வழங்கப்பட்டுவிட்டதாம்.
சர்வதேச அளவில் பெரிய வங்கிகள் ஏற்கெனவே பெரிய அளவிலான வேலை நீக்க நடவடிக்கையை அறிவித்துள்ளன. எச்எஸ்பிசி வங்கி 30000 பேரையும், பிரிட்டனின் லாயிட்ஸ் வங்கி 15000 பேரையும் அடுத்த இரண்டாண்டுகளுக்குள் நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications