தமிழக,கேரள எல்லைகள் வழியாக கள்ளசாராயம் கடத்துவது அதிகரித்துள்ளது: உளவுத் துறை எச்சரிப்பு
கோவை: தமிழக எல்லை பகுதிகளின் வழியாக கேரளாவிற்கு கள்ள சாராயம் கடத்தப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக, கேரள உளவுத்துறையினர் அறிக்கை தெரிவிக்கிறது.
கேரளாவை சேர்ந்த உளவுத்துறையினர் சமீபத்தில், அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டியிடம் அளித்துள்ள அறிக்கையில், கேரளாவின் எல்லை பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களாக அதிகளவிலான கள்ளசாராயம் கடத்தப்படுவதாக தெரிகிறது. சொகுசு கார்கள் மற்றும் வாகனங்களில் வைத்து கள்ள சாராயம் கடத்தப்படுவதால், வெளியே தெரிவதில்லை.
கேரளாவின் எல்லை பகுதிகளான வாளையார், கூடலூர், மங்களூரு, குண்டல்பேட்டை ஆகிய பகுதிகளின் வழியாக வரும் வாகனங்களை திடீர் சோதனையிட்டதில், பல சொகுசு வாகனங்கள் மற்றும் லாரிகளில் கள்ள சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் கள்ளசாராயம் கடத்திய வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டாலும், கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆந்திராவில் எல்லைகளை கடந்து செல்லும் பஸ்களிலும் கள்ளசாராயம் அதிகளவில் கடத்தப்படுகிறது.
ஆந்திராவில் தயாரிக்கப்படும் கள்ளசாராயம் நேரடியாக கேரளாவிற்கு கடத்தப்படுவதில்லை. இவை எல்லை பகுதிகளில் உள்ள காடுகளில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய குடிசைகளில் பதுக்கி வைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப சிறு அளவுகளில் சப்ளை செய்யப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளுக்கும் கள்ள சாராயம் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக அந்த மாநிலங்களின் உளவுத்துறைகளும் எச்சரித்துள்ளன. இது குறித்து எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications