சீன தொழிற்சாலையில் தீவிபத்து: 14 பேர் பலி
பீஜிங்: சீனாவில் செராமிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், 14 பேர் உடல் கருதி பலியாகினர்.
சீனாவின் தென்பகுதியில் உள்ள போஷ்சன் நகரில் ஷின்பிங் என்ற செராமிக் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலை 4 மாடி கட்டிடத்தை கொண்டது. நேற்று 4வது மாடியில் பிடித்த தீ கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால், தொழிற்சாலை பணியாளர்கள் இங்கு அங்குமாக ஓடினர். சிலர் உயிர்பிழைக்கும் எண்ணத்தில், மாடியில் இருந்து கீழே குதித்தனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், தீக்காயமடைந்த 14 பேர் பலியாகினர். மேலும் மாடியில் இருந்து குதித்த ஒருவர் படுகாயமடைந்தார். இறந்தவர்களில் பலர் உயிர் பிழைக்க மாடியில் இருந்து குதித்தவர்கள் என தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார்.
லேசான தீக்காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை தகுந்த தீத்தடுப்பு வசதிகள் செய்யாமல் விட்டதே, தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. தொழிற்சாலையின் உரிமையாளரை கைது செயத போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அனுமதியில்லாத கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications