பூலித்தேவனை இழிவுபடுத்துவதாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார்!
நெல்லை: சுதந்திர போராட்டத்திற்கு முழக்கமிட்ட பூலித்தேவனை ஆதி தமிழர் பேரவை இழிவுப்படுத்துவதாகக் கூறி நெற்கட்டும்செவல் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் நெற்கட்டும்செவல் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட பூலித்தேவன் ஆண்ட பாளையம் நெல்கட்டும்செவல். இந்த வரலாற்றை இழிவுப்படுத்துவதற்காக ஆதி தமிழர் பேரவையினர் ஒரு நூலை வெளியிட்டுள்ளனர். அதில் நெற்கட்டும்செவல் பாளையத்தை ஆண்ட மன்னன் ஒண்டிவீரன் என்றும், பூலித்தேவன் பெற்றோர் அவரிடம் வேலை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 20-ம் தேதி ஒணடி வீரன் ஜெயந்தி விழாவில் மாமன்னன் ஒண்டி வீரன் என சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஒண்டிவீரன் சமாதி நெற்கட்டு்ம்செவல் பச்சேரியில் உள்ள பகடைகுடியில் அமைந்துள்ளது. இதில் நெற்கட்டும்செவல் பாளையத்தை ஆண்ட மாமன்னன் ஒண்டிவீரன் என கல்வெட்டு வைத்துள்ளனர்.
இதனால் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த கல்வெட்டை அகற்ற வேண்டும். பூலித்தேவனின் மாளிகை மாவீரன் பூலித்தேவன் மாளிகை என்ற பெயரில் உள்ளது. தென் தமிழகத்தில் 16 பாளையங்களில் தலைமை பாளையம் ஆவுடையாபுரம்-நெற்கட்டும்செவல் ஆகும். இதற்கு சான்றாக தமிழக வரலாற்று நூல்களில் மாமன்னன் பூலித்தேவன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பூலிதேவன் மாளிகையை மாமன்னன் பூலித்தேவன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
இவவாறு அந்த மனுவி்ல் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications