நண்பர் விரலை கடித்து எடுத்த நபரை கைது செய்ய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
பெரியபாளையம்: நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரது விரலை கடித்து துப்பியவரை கைது செய்ய கோரி பெண்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், கடித்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரியபாளையம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் சுதாகர் (28), இவரது நண்பர்கள் சித்திக் மற்றும் அன்சாரி. கடந்த சனிக்கிழமை இரவு தனது ஹோட்டலை பூட்டிய சுதாகர், வீட்டிற்கு நடந்து சென்றார். வழியில், சித்திக்கும் அன்சாரியும் குடிபோதையில் கிடந்தனர்.
அவர்களை சாலையின் ஒரமாக இழுத்து கொண்டு வந்தார். அப்போது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். குடிபோதையில் இருந்த அன்சாரி, சுதாகரின் விரலை கடித்து துப்பினார்.
அதற்குள் சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதியினர், நண்பர்கள் 3 பேரையும் பிரித்துவிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதுகுறித்து, அன்சாரியும், சுதாகரும் தனித்தனியாக பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் யாரையும் கைது செய்த நிலையில், சுதாருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பெரியபாளையம் போலீஸ் நிலையம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். முற்றுகையி்ல் ஈடுபட்டவர்களை ஆறுதல்படுத்திய போலீசார், நண்பரின் விரலை கடித்து துப்பிய அன்சாரியை கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications