அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுக்க ஆதரவு பெருகி வருகிறது: பிருந்தா காரத்
நீலகிரி: நாட்டில் உள்ள ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்ட மாவட்டச் செயலாளர் பத்ரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியதாவது, தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் பணமுதலைகளுக்காக கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மாற்ற வேண்டும்.
யானை வழித்தடத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்களால் வன விலங்குகளுக்கும், இயற்கைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இந்தப் பிரச்சனையில் ஆதிவாசிகளை வெளியேற்றுவது சரியல்ல. தேயிலை பிரச்சனையில் இடைத்தரகர்கள் தான் லாபம் அடைகின்றனர்.
விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே, பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது.
தற்போது நடைபெறும் மத்திய அரசு போல் ஒரு ஊழல் அரசை இதுவரை பார்த்ததே இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் நாள்தோறும் ஒன்வொன்றாக தற்போது வெளிவர துவங்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக மக்களின் போராடுவதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால், போராட்டம் வளர்ந்து கொண்டே வருகிறது.
ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே இருந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. மத்திய அரசு புதிய லோக்பால் மசோதாவை திரும்ப பெற வேண்டும் அல்லது திருத்தம் செய்து தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பிருந்தா காரத் கூறினார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications