தேக்கடி படகு விபத்திற்கு படகு தான் காரணம்: விசாரணை அறிக்கை குற்றசாட்டு
திருவனந்தபுரம்: ஏரி, அணை ஆகியவற்றில் இயக்க தகுந்த வடிவமைப்பு இல்லாமல் இருந்ததே, தேக்கடி படகு கவிழ்ந்த விபத்திற்கு காரணம் எனத் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, கேரள மாநிலம் தேக்கடியில் அணைப்பகுதியில் சென்ற படகு கவிழ்ந்ததில், 45 பயணிகள் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து, நீதிபதி மொய்தீன் குஞ்சு தலையிலான குழுவை விசாரித்து வந்தது.
நேற்று இக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: விபத்தில் சிக்கிய படகு, ஏரி, அணை ஆகிய பகுதிகளில் இயக்க தகுந்த வடிவமைப்புடன் உருவாக்கப்படவில்லை. தண்ணீரில் மிதப்பதில் நிலையற்ற தன்மைக் கொண்டது. 2 அடக்குகளை கொண்ட அந்த படகில் 75 பேர் மட்டுமே பயணிக்கலாம்.
ஆனால், விபத்தின் போது, 92 பேர் ஏற்றி செல்லப்பட்டுள்ளனர். மேலும் படகை இயக்குவதில் அனுபவம் இல்லாதவர் இயக்கி உள்ளார். தகுதியற்ற இந்த படகை தயாரித்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. படகை பயணத்திற்கு பயன்படுத்தும் முன், தொழில்நுட்ப நிபுணர்களிடம் காட்டி ஒப்புதல் சான்றிதழும் பெறவில்லை.
தகுதியில்லாத இந்த படகை பயணத்திற்கு அனுமதி அளித்த கேரள சுற்றுலாத் துறை அதிகாரிகளும், சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளும் தவறு செய்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications