முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க கோரி கரூரில் மனித சங்கிலி போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி கரூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கொலை தண்டனையை தடை செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் , உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மனித சங்கலி போராட்டம் நடந்தது.

இந்த மனித சங்கலி நிகழ்ச்சியில், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் தமிழரை பழிவாங்கும் நோக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன. மேலும் பேரறிவாளன் சிறையில் எழுதிய கடிதம் தமிழர் களத்தின் அமைபினரால் துண்டறிக்கையாக பரப்புரை செய்யப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சிறையில் வாடும் மூவரின் படங்கள் தாங்கிய பதாகைகளை கழுத்தில் மாட்டியபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். போராட்டத்தில், ம.தி.மு.க., உலகதமிழர் பேரமைப்பு, தமிழர் களம், திராவிட கழகம், பெரியார் தி.க., பெண்கள் தன் உதவி குழுக்கள், தமிழர் முன்னணி, நாம் தமிழர் கட்சி, கரூர் பிரஸ் கில்டு, தமிழர் உணர்வாளர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+