சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் நான்கு பெண் வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் குதித்தனர்
சேலம்: சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் பெண் வக்கீல்கள் நான்கு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பரபரப்பு மேலும் கூடியுள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தனியார் இடத்தில் இவர்கள் மூன்று பேரும் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் நான்கு பெண் வக்கீல்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வக்கீல்கள் தமயந்தி, கீதா, அறிவுமதி, பிரபா ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இதனால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள், மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர் உள்ளே நுழைய முயன்றனர்.இதையடுத்து போலீஸார் கேட்டை மூ்டினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்ட நிலை உருவானது.
9ம் தேதி முதல் தஞ்சை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தஞ்சை மாவட்ட வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications